ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக்க விஎச்பி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil


பெங்களூர்: சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறுத்திவிட்டு ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கோடிக்கணக்கான இந்துக்களின் எண்ணத்துக்கு எதிராக மத்திய அரசு ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திரம் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாடு முழுவதும் கடும் போராட்டம் நடத்தப்படும்.

இத்திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும்.

கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் வருகிறது. அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலேசியாவில் இந்துக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+