திருச்சி அருகே கோஷ்டி மோதல்: 5 பேர் காயம் - 11 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், புத்தூர்-வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு தரப்பினருக்கிடையை நேற்றிரவு முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். இதில் 1 பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு கோஷ்டியினர் மருத்துவமனையில் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்கள், நர்சுகள் பெரும் பீதியடைந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து கலாட்டா செய்த 11 பேரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications