தாயாருடன் கள்ள உறவு-ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற மகன்
மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு தவறான பெண் தொடர்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பழனிச்சாமி (58), நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெருமாள் (30) என்பரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கசமுசா தகவல்களை தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தவறாகப் பேசினர். எனது தாயார் பழனியம்மாளுக்கும் பழனிச்சாமிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக பேச ஆரம்பித்தனர். இதையடுத்து தாயாரை நான் கண்டித்தேன். அதே போல பழனிச்சாமியையும் நேரில் பார்த்து கண்டித்தேன்.
இந் நிலையில் நேற்று அதிகாலை நான் டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பினேன். அப்போது என் வீட்டு வாசலில் நின்று கொண்டு எனது தாயாரை பழனிச்சாமி செக்ஸ் உறவுக்கு அழைத்தார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த நான் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து பழனிச்சாமியை கழுத்தில் குத்தினேன். பின்னர் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சாலையில் உடலை வீசினேன் என்றார்.
இதையடுத்து பெருமாளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications