தென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி
தென்காசி: தென்காசியில் கடந்த 3 வருடங்களாகவே மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்காசியில் கடந்த 2,3 ஆண்டு காலமாகவே தொடர்ந்து மத மோதல்கள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மத, ஜாதி மோதல்கள் எவ்விதத்ததிலும் சமுதாயத்திற்கு முன்னோற்றம் அளிக்காது. இரு பிரிவு மோதல்களை நிரந்தரமாக தீர்க்காமல் இந்த அரசு காவல்துறையை வைத்து தீர்க்க நினைப்பது அறிவுபூர்வமானது அல்ல. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது.
நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் புதிய தமிழகம் அந்த பணியை செய்யும்.
வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தென் தமிழகத்தை தேய வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக 39 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் திருச்சிக்கு தெற்கே எதுவும் இல்லை.
தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடைபெறும் சட்ட மன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.
பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த அரசு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை அரசியல் சாசன முறைபடி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நாணயமான செயல்.
தென்காசி எம்பியாக உள்ள அப்பாத்துரை பல வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. விரைவில் தென்காசி மாவட்ட மக்களுக்காக மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்க உள்ளேன் என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications