2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி நாகம்மாள் (31). இவர்களது மகள்கள் சத்யா (7), நந்தினி (2). ராஜேந்திரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக நாகம்மாள் சந்தேகப்பட்டதால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம்.
இந் நிலையில் நேற்று காலை நாகம்மாள் இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு அருகே இருந்த மரத்தில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணமுத்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications