For Daily Alerts
Just In
சேது திட்டம்: மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்-சுவாமி
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தில் தனது பிடிவாதத்தைக் விட்டுவிட்டு பொருளாதாரரீதியாக சாத்தியமுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரான சிடியை வெளியிட்டு அவர் பேசுகையில்,
ஜல்லிக்கட்டு தடை விதித்தால் அது மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது போல் அமையும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதே கருத்து ராமர் பாலத்துக்கும் பொறுந்தாதா.
ராமர் பாலம் என்பது ஒற்றுமையின் அடையாளம். அதை எதற்காகவும் சேதப்படுத்த அனுமதிக்க முடியாது.
தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கி அதை சரக்குத் துறைமுகமாக மாற்றலாம். தூத்துக்குடி-கொல்கத்தா இடையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்கலாம். இதன் மூலம் கடல்ரீதியிலான வணிகத்தை அதிகரிக்கலாம் என்றார்.
Comments
Story first published: Sunday, January 27, 2008, 16:24 [IST]