தேர்வு பயம்: ஹோமியோபதி மாணவி தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பரீட்சையை சந்திக்க பயந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஒன்றில் பி.எச்.எம்.எஸ். படித்து வந்தவர் சரிதா. இவருக்கு இன்று முதல் தேர்வுகள் தொடங்குவதாக இருந்தது. ஆனால் பரீட்சைக்கு சரிதா சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் எப்படி தேர்வை எழுதுவது என்று புலம்பியபடி இருந்தாராம்.
இந்த நிலையில், நேற்று டெல்லி அருகே உள்ள நரேலாவில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இருப்பினும் தற்கொலைக்கு முன்பு சரிதா கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications