வைகோ உயிரை காத்த ராஜிவ்: பீட்டர்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு
ஏற்பட்டது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.
இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.
வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications