For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ உயிரை காத்த ராஜிவ்: பீட்டர்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு
ஏற்பட்டது.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.

இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X