பாஜக பிரமுகர் கொலை: கடையநல்லூரில் கடையடைப்பு, கடும் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடையநல்லூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் பாஜக சார்பில் கண்டன ஊர்வலமும் நடக்கவுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெல்லை மாவட்ட பாஜக முன்னாள் வர்த்தக பிரிவுத் தலைவராக இருந்த ராஜபாண்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் இன்று கடையநல்லூர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாலையில் பாஜகவினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications