காபி.. சர்க்கரை நோயாளிகளின் எதிரி!
வாஷிங்டன: காபி, டீ, சாப்ட் டிரிங்குகளைக் குறைத்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக காபின் (Caffeine) விளங்குவதாகவும், இது காபி தவிர டீ, சாப்ட் டிரிங்குகளிலும் அதிகம் உள்ளதாகவும் டியூக் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த கழத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜேம்ஸ் லேன் கூறுகையில், டைப் 2 ரக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டும் போதாது. உணவிலும் தீவிர கட்டுப்பாடு தேவை. இன்சுலின் சிகிச்சையுடன் காபின் நிறைந்த பானங்கள் குடிப்பதை தவிர்க்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எளிதாகிறது.
காபின் நிறைந்த பானங்களை பருகுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 8 முதல் 26 சதவீதம் அளவுக்கு அதிகமாவது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இதனால் சர்க்கரை நோயாளிகள் காபி குடிப்பதையும் காபின் கொண்ட பானங்களை அருந்துவதையும் தவிர்த்துவிடுவதே நல்லது என்கிறார்.
இத் தகவலை சயின்ஸ் டெய்லி இதழ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications