For Daily Alerts
Just In
தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: அத்வானி-மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து மிக அதிகமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் பல மடங்காக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இசட் பிளஸ் அதிகபட்ச பாதுகாப்பில் தான் இந்த இரு தலைவர்களும் உள்ளனர். ஆனாலும், இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என உளவுப் பிரிவு கருதுகிறது.
இதையடுத்து அவர்களது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அவர்களது பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
Story first published: Wednesday, January 30, 2008, 13:27 [IST]