மதுரை அருகே கோவிலில் பிரியாணி திருவிழா!
மதுரை: மதுரை அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் கூட்டம் அலைமோதியது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள முனியாண்டி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்குள்ள முனியப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரியாணி திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் தை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் இந்த திருவிழா நடைபெற்றது.
விழாவில் காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பாலை முனியப்பசாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மாலையில் பூ தட்டு, தேங்காய், பழம் மற்றும் நேர்த்திக் கடனாக விடப்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்து ஆடு, கோழிகளை கோவிலில் விட்டனர்.
பின்னர் அந்த ஆடு, கோழிகள் அனைத்தும் நள்ளிரவில் வெட்டப்பட்டு மணக்க மணக்க சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த பிரியாணி திருவிழாவில் கூட்டம் அலைமோதியது.












Click it and Unblock the Notifications