விஜயகாந்த், சரத்குமார் முதல்வர் வேஷம் தான் போடலாம்-நெப்போலியன்
கோவை: விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் படத்தில் வேண்டுமானால் முதல்வர் வேஷம் போடலாம். ஆனால் நிஜத்தில் அது எப்போதும் நடக்காது என திமுகவைச் சேர்ந்த நடிகர் நெப்போலியன் கூறினார்.
கோவை மாநகர திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் நெப்போலியன் பேசுகையில்,
சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் தான் நடிகர் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கட்சி துவங்கும் முன்பே மேம்பால அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்று விட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மண்டபத்தை இடித்தாக நடிகர் விஜயகாந்த் கூறுவது கண்டிக்கத்தக்கது.
இந் நிலையில் அவர் முதல்வர் ஆவதைப் பற்றியே அடிக்கடி பேசி வருகிறார். அவர் வைத்துள்ள கல்லூரிக்கே ்வர் முதல்வர் ஆக முடியாது. பின்பு எப்படி தமிழக முதல்வர் ஆவது.
நடிகர் சரத்குமார் இன்னும் சட்டபை தேர்தலை சந்திக்காத நிலையில் அடுத்த தேர்தலில் நான் முதல்வர் ஆகி விடுவேன் என்கிறார். இந்த இரு நடிகர்களும் சினிமாவில் வேண்டும் என்றால் முதல்வர் வேடம் போடலாம். நிஜத்தில் கண்டிப்பாக நடக்காது. முதல்வர் பதவியில் அமர அவர்களிடம் எந்தத் தகுதியும் தகுதி இல்லை.
4 முறை எம்.எல்.ஏவாக இருப்பவர்களே முதல்வர் ஆக முடியும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றார் நெப்போலியன்.












Click it and Unblock the Notifications