For Daily Alerts
Just In
ஒட்டப்பிடாரம்-மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள எப்போதும் வென்றான் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் மனநிலை பாதித்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சுற்றி திரிந்தார்.
இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளியான கணபதி அந்த பெண்ணை அங்குள்ள ஒரு கடையின் பின்புறம் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து கடை உரிமையாளர் வெள்ளத்தாய் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Wednesday, January 30, 2008, 11:08 [IST]