கடலடி கேபிள்கள் துண்டிப்பு-பல நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் பாதிப்பு

அதே போல அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுடனான தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எகிப்து அருகே மெடிட்டரேனியன் கடல் பகுதியில் ஒரு கப்பலின் நங்கூரம் உடைந்து விழுந்ததில் இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதை சரி செய்ய 12 முதல் 15 நாட்கள் ஆகும் என அதை பராமரித்து வரும் பிளாக் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அட்லாண்டிக் வழியாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள சர்வர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இந்திய இன்டர்நெட், சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் 70 சதவீத நெட்வோர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குவைத், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரு கேபிள்கள் துண்டிக்கப்பட்டதையடுத்து மிச்சமிருக்கும் கேபிள்கள் தான் முழு லோடையும் தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்டர்நெட்டின் வேகம் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications