பட்டுக்கோட்டை அருகே புளியோதரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புளியோதரை சாப்பிட்ட 27 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
பட்டுக்கோட்டை அருகே வெள்ளூர் என்ற கிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி உள்ளது. இங்கு 45 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு நேற்று காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது.
அதை சாப்பிட்ட 27 மாணவர்கள் அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு சென்றனர். காலை பிரேயரில் பங்கேற்றபோது அவர்களுக்கு திடீரென வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதனால் பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புளியோதரை கெட்டுப் போயிருக்க வேண்டும். அதனால்தான் மாணவர்களுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும் என டாக்டர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications