மதுரை பாமக பிரமுகர் இளஞ்செழியன் சரண்
மதுரை: வெடிகுண்டு தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை பாமக பிரமுகர் இளஞ்செழியனும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மதுரை மாவட்ட பாமகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். பரம்புப்பட்டி அருகே உள்ள இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அங்கு வெடிபொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த பெரியசாமி, மாதேஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இளஞ்செழியன் அவரது உதவியாளர்கள் செல்வம், மாரி, இருளப்பன், ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இளஞ்செழியன் முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் இளஞ்செழியன் உள்ளிட்ட நான்கு பேரும் மதுரை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணா முன்னிலையில் சரணடைந்தனர்.












Click it and Unblock the Notifications