மதுரையில் அமையும் 2 சாப்ட்வேர் பார்க்குகள்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள இலந்தைகுளத்திலும் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சியிலும் இரு சாப்ட்வேர் பார்க்குகள் உருவாகப்படவுள்ளன.
இதுகுறித்து எல்காட் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை இலந்தைகுளத்தில் டைடல் பார்க் அமைக்க 29 ஏக்கர் நிலமும், வடபழஞ்சியில் ஐடி பார்க் அமைக்க 236 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வடபழஞ்சியில் கூடுதலாக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
இந்த பார்க்குகள் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும். மதுரையில் எல்காட் சார்பில் அமைக்கப்படவுள்ள டைடல் பார்க்கில் எச்.சி.எல்., டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளை தொடங்க ஏற்கனவே முடிவு செய்துவிட்டன.
இலந்தை குளத்தில் எல்காட் சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய ரயில் நிலையமும், புதிய மேம்பாலமும் அமைக்கப்படும். இந்த டைடல் பார்க் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும்.
வடபழஞ்சியில் அமையவுள்ள ஐடி பார்க்கிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்றார் உமா சங்கர்.












Click it and Unblock the Notifications