சேது சமுத்திர திட்டத்தால் நாட்டுக்கு ஆபத்து-கடலோர காவல்படை

இந்த கப்பல் போக்குவரத்து கால்வாயை விடுதலைப் புலிகள் பயன்படுத்தக் கூடும் என்றும், கடற் புலிகளால் இந்தியாவுக்கும் இப் பகுதியின் கப்பல் போக்குவரத்துக்கும் ஆபத்து விளையக் கூடும் என்றும் கூறியுள்ளார்.
கடலோரக் காவல் படை தினத்தையொட்டி நிருபர்களிடம் பேசிய அதன் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர்.எப்.காண்ட்ராக்டர், கடற் புலிகளின் பெயர் குறிப்பிடாமல் பேசினார். அவர் கூறியதாவது:
சேது சமுத்திரக் கால்வாயை தீவிரவாதிகள் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகக் குறுகலான இந்தக் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களுக்கு இந்தப் பகுதியில் செயல்பட்டு மிகவும் தீவிரவாத இயக்கத்தால் ஆபத்துகள் விளையலாம்.
எனது இந்தக் கருத்துக்களை நான் ஏற்கனவே அரசிடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.
ராமர் பாலத்தை சுட்டிக் காட்டி இத் திட்டத்துக்கு எதிராக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வழக்கு தொடர்ந்து அது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் இப்போது கடலோரக் காவல் படை ரூபத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்தத் திட்டத்தை கடற்படைத் தலைவர் சுரீஷ் மேத்தாவும் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் வளர்சிக்கு எதிரானவர்கள் என கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications