மாநாட்டுக்கு தடை: தமிழக அரசுக்கு நெடுமாறன் கடும் கண்டனம்
சென்னை: கடலூரில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெறவிருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்ததற்கு அந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (பிப்ரவரி 2ம் தேதி) கடலூரில் நடைபெற இருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டன. ஆனால் வழக்கம் போல கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்துள்ளது.
ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை கண்டித்து இந்த மாநாடு நடைபெற இருந்தது. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் காவல்துறை நேற்றிரவு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பலமுறை எங்கள் மாநாடுகளுக்கு இதே போன்று தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அப்போதெல்லாம் உயர்நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் எங்கள் மாநாடுகளுக்கு அனுமதியும் அளித்துள்ளது. தற்போது மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications