சென்னை-டெல்லி விமானத்தில் மோதிய பறவை: அவசரமாய் தரையிறக்கம்
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய விமானத்தில் பறவை மோதியதால் அந்த விமானம் மீண்டும் மிக அவசரமாக சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
இன்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம் 114 பயணிகளுடன் நேற்றிரவு 9.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு கிளம்பியது. வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அதன் மீது பறவை மோதியது. மோதிய பறவை சிதைந்து என்ஜினில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விமானி மீண்டும் சென்னைக்கே விமானத்தைத் திருப்பினார். விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். உடனடி அனுமதி தரப்பட்டதையடுத்து 10.30 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலே தரையிறங்கியது.
அந்தப் பறவையின் உடலை என்ஜினில் இருந்து அகற்ற 2 மணி நேரம் முயன்றனர். ஆனால், அது முடியாமல் போகவே விமானம் ரத்து செய்யப்பட்டது. நள்ளிரவில் பயணிகளுக்கு பணம் திருப்பித் தரப்பட்டது.












Click it and Unblock the Notifications