இலங்கையிலிருந்து மேலும் 9 அகதிகள் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 9 பேர் அகதிகளாக அரிச்சல்முனை தீவுப்பகுதிக்கு படகில் வந்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கு கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் படகில் அரிச்சல்முனை பகுதிக்கு வந்தனர். அவர்களை தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications