தலித் மாணவர்கள் உதவி நிதி-திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம்
திருச்சி: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் வேலு சரவணன் தலைமையில் இன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் ஊழியர்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் அசன் அன்பழகன் பேசியதாவது,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உதவித் தொகை குறித்து வெளியிட்ட ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விரைவில் மாநிலம் முழுவதும் எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.
இந்த போராட்டத்தில் திருச்சி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து கலந்து கொண்டனர்.