For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை வீரர்களை தமிழக மீனவர்கள் சுட்டார்களா? கலெக்டர் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: இலங்கை கடற்படை ரோந்துப் படகு மீது தமிழக மீனவர்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில், தங்களது ரோந்து படகை தமிழக மீனவர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்கியதாக இலங்கை கடற்படை புகார் கூறியுள்ளது.

தமிழக மீனவர்கள் அத்துமீறி வந்தபோது அந்தப் படகை நோக்கி கடற்படை படகு சென்றபோது, தமிழக மீனவர்கள் படகில் இருந்து சிலர் கை எறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக இலங்கை கடற்படை கூறுகிறது.

இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் சுட்டிருக்கலாம் எனவும் அது சந்தேகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு அது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X