மதுரை நர்ஸ் தற்கொலை-சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
மதுரை: மதுரையில் நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை துவங்கியுள்ளது.
மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்த நாகேஷ். தொழிலதிபரான இவர் மு.க.அழகிரிக்கு நெருக்கமான நண்பர். இவர் தனது உடல்நிலை சரியில்லாத தாயாரை கவனித்துக் கொள்வதற்காக திருமங்கலத்தை சேர்ந்த நர்ஸ் கற்பகவல்லி என்பவரை நியமித்தார்.
அவர் நாகேஷ் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது தாயாரை பராமரித்து வந்தார். இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நாகேஷ் வீட்டு குளியல் அறையில் நர்ஸ் கற்பகவல்லி தூக்கில் தொங்கினார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆண்டாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு நடத்திய விசாரணையில், கற்பகவல்லி காதலில் தோல்வி அடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாக தெரிவித்தனர். இது தொடர்பாக கற்பகவ்லியின் காதலன் அலங்காநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நர்ஸ் கற்பகவல்லியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். நர்ஸ் இறந்தது குறித்த பிரச்சனை சட்டசபையிலும் எழுப்பபட்டது.
இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந் நிலையில் சிபிசிஐடி துணை எஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மாரிராஜன் தலைமையிலான போலீசார் நேற்று கற்பகவல்லியின் பெற்றோர்கள், காதலன் துரைராஜ், தொழிலதிபர் நாகேஷ் மற்றும் அவரது டிரைவர் நந்தகுமார் உள்பட சுமார் 15 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications