லாரி மோதி 40 ஆடுகள் உடல் நசுங்கி சாவு
Subscribe to Oneindia Tamil
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே ஆடுகள் மீது லாரி மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
விளாத்திகுளம் அருகே உள்ள மேலசண்முகபுரததை சேர்ந்த ஐயரப்பன். இவரது மகன் செல்வம். இவரது உறவினர் முனியசாமி. மூவரும் ஆடு மேய்ப்பாளர்கள். சுமார் 200 ஆடுகள் வைததுள்ளனர். அருகில் வயல்வெளியில் ஆட்டு கிடை போட்டு வந்தனர்.
இன்று காலை மூவரும் சண்முகபுரத்தில் இருநது 200 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்திற்கு சென்றனர். சித்தவன்நாயகன் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஆடுகள் மீது பயங்கரமாக ஏறியது.
இதில் 40 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.












Click it and Unblock the Notifications