எம்.ஜி.ஆர். படத்தைக் கிழித்த அதிமுக - தேமுதிக கொதிப்பு
ஆறுமுகநேரி: காயல்பட்டணத்தில் தேமுதிகவினர் வைத்திருந்த டிஜிட்டல் போர்டில் இடம் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். படத்ைத அதிமுகவினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுகூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.
அதிமுக அல்லாத யாரும் எம்ஜிஆர் படத்தை போடக்கூடாது. போடும் தகுதியும் அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு எம்ஜிஆர் படத்தை போட்டு யாராவது தட்டியோ, போர்டடோ, டிஜிட்டல் போர்டோ வைத்தால் எம்ஜிஆர் படத்தை அதிமுக தொண்டர்கள் கிழித்தெறிய வேண்டும்.
அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி போஸ்டரில் உள்ள எம்ஜிஆர் படத்தை கிழிக்கும் போது போலீசார் என் மீது வழக்கு தொடரலாம் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில்தான், காயல்பட்டிணத்தில் தேமுதிகவினரின் டிஜிட்டல் போர்டில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதாவை கைது செய்யாவிட்டால் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோமதி கணேன் கூறுகையில், அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது போலீசுக்கு விடப்பட்ட சவாலாகும். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அனிதாவை கண்டிதது தூத்துக்குடி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தேமுதிக போஸ்டர்கள் கிழிக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications