சித்தூர் கோர்ட்டில் அழகிரி
Subscribe to Oneindia Tamil
சித்தூர்:முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் இன்று சித்தூர் நீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்ற்பட்டுள்ளது. அங்கு அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்பட 12 பேர் நேரில் ஆஜரானார்கள்.
ஒருவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் கோர்ட்டுக்கு வந்து ஆஜரானதால், பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் வழக்கை வருகிற 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications