நக்ஸல்கள் மீது போலீஸ் எதிர் தாக்குதல் நடத்தாதது ஏன்?: ஜெ
தர்மபுரி: நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியபோது போலீசார் ஏன் எதிர் தாக்குதல் நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தி 6 துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை வெகு எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு 410' மஸ்கட் ரக துப்பாக்கிகள், ஒரு 303' ரக துப்பாக்கி உட்பட ஆறு துப்பாக்கிகள், துப்பாக்கியில் பொருத்தக்கூடிய குத்துவாள், மற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
மேற்படி மர்மக் கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு, நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் காவல் நிலைய அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, காவல் நிலைய அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு ஏதேனும் புகார் கொடுத்தார்களா? அப்படி புகார் ஏதேனும் கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? நடவடிக்கை எடுக்க யாராவது தடையாக இருந்தார்களா?
1998 ஆம் ஆண்டு காட்டுக் கொள்ளையன் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம், வெள்ளிதிருப்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போது, காவல் துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். தற்போது நடைபெற்ற சம்பவத்தில் எதிர் தாக்குதல்கூட காவல் துறையால் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications