துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன்(38). வளைகுடா கனவுகளுடன் கடந்த கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ரூ. 1 லட்சம் செலவு செய்து பணியில் சேர்ந்தார்.
லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். பணியில் சேர்ந்த இரண்டரை மாதத்திலேயே அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப்-காண்டிராக்டரிடம் பணிக்கு சேர்ந்து விட்டார்.
அந்நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணியில் இருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்பொழுது அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டுள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
அதனால் தற்போது தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் (இதை வேலை தந்த நிறுவனம் வாங்கி வைத்துள்ளது) அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந் நிலையில் யாரேனும் உதவ முன் வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன். இவரது தொலைபேசி எண் 050-9044240.
சட்டரீதியிலோ அல்லது வேறு வழியிலோ உதவ முடிந்தவர்கள் உதவலாம்.












Click it and Unblock the Notifications