ஓய்வு பெற்ற அதிகாரி நடுரோட்டில் வெட்டிக் கொலை
பாபநாசம்: பாபநாசத்தில் இன்று காலை ஓய்வு பெற்ற சிவில் சப்ளை அதிகாரி நடுரோட்டில மர்ம கும்பலால் வெட்டி கொலை செயயப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்நதவர் ஞானபிரகாசம். சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிவில் சப்ளைஸ் மண்டல மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது மனைவி இறந்து விட்டதால் வேறொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் பாபநாசம் பொதிகையடி வடக்கு தெருவில் வசித்து வந்தார். ஆனால், 2வது மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஞானபிரகாசம் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் ஞானப்பிரகாசத்தின் முதல் மனைவியின் மகள் திரேசாவுக்கும் அவரது கணவர் ரமேசுக்கும் ஏற்பட்ட தகராறால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந் நிலையில் இன்று காலை ஞானப்பிரகாசம் டீக்கடையில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது அவரை தாக்கியது.
அவர்களிடமிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஞானபிரகாசத்தை அந்தக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட ஞானபிரகாசம் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.