இளங்கோவன் பேனர் கிழிப்பு-தொண்டர்கள் கொந்தளிப்பு !
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள சத்தியமங்கலத்தில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேனரை கிழித்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே தூக்கநாயக்கன் பாளையத்தில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்
திட்ட உதவிகளை வழங்கினார்.
இளங்கோவனை வரவேற்று காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சத்தியமங்கலத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.
இதில் சில பேனர்களில் இளங்கோவனின் படத்தை மட்டும் மர்ம ஆசாமிகள் சிலர் வெட்டி விட்டனர். மேலும் சில பேனர்களை கிழித்துவிட்டனர்.
இதை கண்ட இளங்கோவானின் ஆதரவாளர்கள் கொதித்தனர். பேனரை கிழித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications