காதலர் தினம் கொண்டாடிய எய்ட்ஸ் நோயாளிகள்!
சென்னை: சென்னையில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 200 பேர் இன்று காதலர் தினத்தைக் கொண்டாடினர். பொதுமக்களிடம் ரோஜாப் பூக்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்து எய்ட்ஸ் தாக்கியோர் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்டுமாறு வேண்டிக் கொண்டனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் ஆதரவு கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த வித்தியாசமான காதலர் தின கொண்டாட்டம் திருவி.கி. பூங்காவில் நடைபெற்றது.
அங்கு பத்து அடி உயரம், பத்து அடி அகலத்தில் ரோஜாக்களால் ஆன பெரிய இதய வடிவம் வைக்கப்பட்டிருந்தது. 1100 ரோஜாக்களால் இந்த இதயத்ைத உருவாக்கியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து எய்ட்ஸ் ஆதரவு கழகத்தின் தலைவர் ஹரிஹரன் கூறுகையில், மக்களிடையே எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்த தவறான எண்ணங்களைக் களைய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரை சமூகம் ஒதுக்கக் கூடாது. அவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் இன்னும் அதிகம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற தருணங்கள் பெரிதும் உதவும் என்றார்.