காலம் நம் கதவுகளை தட்டும் சூழல் வரும்-வைகோ
சென்னை:யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும் என மதிமுகவினரிடையே அக் கட்சியின் ெபாதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மறைந்த கவிஞர் குடியரசுவின் நினைவு தினம் மதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதிமுக சார்பில் கவிஞர் குடியரசுவின் வாரிசுகளுக்கு 8 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் ரூ.5 லட்சத்தை கவிஞர் குடியரசு மகன் இசைவாணனிடம் வைகோ வழங்கினார்.
அப்போது வைகோ பேசுகையில், கடந்த 14 ஆண்டுகளாக நாம் தோல்விகளால் தோய்ந்து போனாலும் கூர் தீட்டப்பட்டிருக்கிறோம். யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலே ஒரு நீக்ரோ இளைஞன் போட்டியிடக்கூடிய அளவுக்கு மாறியிருக்கிறது. நம்மால் முடியும்.
காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும். சிங்கம் எப்போதும் சிலிர்த்து எழாது. எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது புறப்படுவோம் என்றார்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க!












Click it and Unblock the Notifications