சிவனாண்டி ரயில்வேக்கு தூக்கி அடிப்பு
சென்னை: அதிமுக ஆட்சியில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் போல செயல்பட்டு ஆட்சி மாறியதும் நீண்ட காலமாக பணி வழங்கப்படாமல் சமீபத்தில் ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்ட சிவனாண்டி, இப்போது ரயில்வே டிஐஜியாக்கப்பட்டுள்ளது.
இவர் தவிர மேலும் 14 உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார்.
சென்னை குற்றப் பிரிவு ஐஜி ஜே.கே.திரிபாதி, பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜி துக்கையாண்டி, சென்னை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு (சிலை திருட்டு தடுப்பு) ஐஜி பிரமோத் குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மது விலக்கு டிஐஜி மாசானமுத்து, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி (எஸ்.ஐ.டி) டிஐஜி ஆறுமுகம், சிலைத் திருட்டுப் பிரிவு சிஐடி பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆயுதப் படை டிஐஜி சிவனாண்டி, ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட இணை ஆணையர் சந்ததீப் ராய் ரத்தோர், தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்து துணை ஆணையர் மனோகரன், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வராக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இதுவரை இருந்த வனிதா, சென்னை தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்பி ஆகியுள்ளார் கல்பனா நாயக்.
சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ராஜேஸ்வரி மாற்றப்பட்டு திருட்டு வீடியோ தடுப்பு சிஐடி பிரிவு எஸ்பியாகியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் விஜயகுமாரி, மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications