ரவுடி டாக் ரவி குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: மதுரையின் பிரபல ரவுடி டாக் ரவி மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவன் ரவிக்குமார் என்கிற டாக் ரவி. இவன் 1998ம் ஆண்டு எஸ்.எஸ். காலனியை சேர்ந்த ரவுடி ஆட்டோ சுந்தரையும், 1999ம் ஆண்டில் ரவுடி அழகர் என்பவனின் தம்பி இளங்கோவனையும் கொலை செய்தான்.
திலகர் திடலை சேர்ந்த சுசிலா என்ற பெண்ணியிடம் நகைகளை கொள்ளை அடித்ததோடு அவரையும் கொலை செய்தான். மேலும் இவன் மீது கார் திருட்டு, கத்தியை காட்டி வழிப்பறி செய்தல், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவை கொலை செய்த குற்றவாளி பாஸ்கரனுக்கு அடைக்கலம் கொடுத்தது என தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இந் நிலையில் டாக் ரவியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீசார் முடிவு செய்தனர். இதை அறிந்த ரவி தானாகவே போலீசில் சரணடைந்தான். அவனை திருமங்கலம் போலீசார் சிறையில் அடைந்தனர்.
அவனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்குமாறு மதுரை கமிஷனர் நந்தபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி டாக் ரவி குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளான். இதனால் அவனால் ஓராண்டுக்கு ஜாமீன் பெற முடியாது.












Click it and Unblock the Notifications