பண்ணையாரை பாத்ரூமில் பூட்டிவி்ட்டு நகையுடன் பெண் ஓட்டம்
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் பண்ணையாரை பாத்ரூமுக்குள் வைத்துப் பூட்டி விட்டு, அவரது மனைவியை கண்ணைக் கட்டிவிட்டு 30 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிய வேலைக்கார பெண்னை போலீசார் கைது செய்தனர்.
கல்லிடைக்குறிச்சி வைத்தியப்புரம் தெருவை சேர்ந்த பண்ணையார், சுந்தரம் அய்யர். இவரது மனைவி பார்வதம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது வீட்டில் கல்லிடைக்குறிச்சி சரக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா என்ற உச்சிமாகாளி கடந்த 3 மாத காலமாக வேலை பார்த்து வந்தார்.
காலையில் வழக்கம் போல் உமா வேலை வந்தார். அப்போது சுந்தரம் அய்யர் பாத்ரூம் சென்றிருந்தார்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க உமா திட்டமிட்டார். பாத்ரூம் கதவை பூட்டி சுந்தரம் அய்யரை சிறை வைத்தார். பின்னர் பர்வதம்மாள் கண்னை துண்டால் கட்டி அவர் அணிந்திருந்த 30 பவுன் நகையை பறித்தார். வீட்டு கதவை முன்புறமாக தாளிட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் நெல்லை வந்து அங்குள்ள ஓரு நகை கடையில் திருடிய நகைகளை விற்க முயன்றார். உமாவின் நடவடிக்கைகளில் சநதேகம் அடைந்த நகைக்கடை உரிமையாளர் நெல்லை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உமாவை பிடித்து விசாரணை நடத்திய போது கல்லிடைக்குறிச்சியில் வேலை பார்த்த வீட்டில் திருடியது தெரிய வநத்து. இதையடுதது நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.