4 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களைக் காணவில்லை. அவர்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 700 மீன் பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அனைத்துப் படகுகளும் இன்று காலை திரும்பி விட்ட நிலையில் ஒரு படகு மட்டும் திரும்பவில்லை.
அந்தப் படகில் லாரன்ஸ், அந்தோணி சிலுவை, சூசை விஜயகுலன், ராக்பெல்லர் ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம், எனவே இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications