பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் ரவுடி!-போலீஸ் மெளனம்!!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகும் பிரபல ரவுடி இளம் பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தி வருகிறான். ஆனால், இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த ரத்தனசாமி, நோய் வயப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரது மனைவி ஹரிசலம். இவர்களுக்கு சோபி எனற மகள் உள்ளார்.
ரத்தினசாமியின் வீடு மற்ற வீடுகளில் இருந்து சற்று தொலைவில் விலகியுள்ளது.
இவர்களுக்கும் மாடசேரி பகுதியை சேர்ந்த ராஜன் என்ற ஜோஸுக்கும் இடையே முன் பகை இருந்து வந்தது. இவன் குமரி மாவட்டத்தின் பிரபல ரவுடி என்பதும், மாவட்டத்தின் பல்வேறு ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் இருப்பதும் கடந்த சில ஆண்டுகலுக்கு முன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவன் நள்ளிரவு 12.30 மணிக்கு ரத்தனசாமி வீட்டிற்குள் புகுந்து ஹரிசலத்தின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு சோபியை பாலியல்ரீதியில் துன்புறுத்தினான்.
சோபி மற்றும் ஹரிசலம் ஆகியோர் உதவி கேட்டு அலறவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், ராஜனின் கையில் கத்தி இருப்பதை கண்டு அருகில் நெருங்கவில்லை. இதையடுத்து அவன் அங்கிருந்து சாகவசமாக தப்பி சென்றுள்ளான்.
இதேபோல அப்பகுதியில் வயதான பெற்றொர்கள் இருக்கும் மேலும் 3 வீடுகளுக்கும் புகுந்து இளம் பெண்களை பாலியல் தொந்தரவு செய்துள்ளான்.
இதுகுறித்து ஹரிசலம் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரோ ரவுடி ராஜன் மீது வீடு புகுந்து மிரட்டியதாக மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்யவில்லை.
மேலும் ஹரிசலம் புகார் கொடுத்து 5 நாட்கள் ஆகியும் இதுவரை ராஜனை கைது செய்யவும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் போலீசார் மீது இப் பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரவுடி ராஜன் புதுக்கடை போலீசாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதால் போலீசார் அவன் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications