அணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு

அமெரிக்க எம்.பிக்களான ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி, ஜோசப் பிடேன், குடியரசுக் கட்சியின் சச் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.
டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இந்திய அரசு அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அதை ஜூலை மாதத்திற்குள், புதிய அரசு அமைவதற்குள் ஒப்புதல் பெறப்படும். அதைத் தாண்டி விட்டால், புதிய அரசு வந்து விடும். புதிய அரசு இதே நிலையில் ஒப்பந்தத்தை ஏற்கும் எனக் கூற முடியாது.
ஒப்பந்தம் முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பல புதிய கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.
மேலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களையும் புதிய அரசு கிளப்பக் கூடும்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு முடிவதற்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இந்தியாவுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும்.
இந்தியா ஜனநாயக நாடு. இங்குள்ள சில கட்டாயங்கள், நிர்பந்தங்கள் அமெரிக்காவுக்குப புரிகிறது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறியாக வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இது தோல்வி அடைந்தால், அமெரிக்கா மீது இந்தியாவில் தவறான எண்ணங்கள் பரவி விடும் என்றார் அவர்.
பாகிஸ்தான் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட்ட ஜான் கெர்ரி உள்ளிட்ட 3 எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பல்வேறு எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.
இடதுசாரிகள் கண்டனம்:
அமெரிக்க எம்.பிக்கள் விதித்துள்ள மே மாத கெடுவுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.
இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதாலேயே இதை அமல்படுத்த அமெரிக்கா நெருக்குதல் கொடுக்கிறது. ஆனால் அதற்கு இந்தியா அடி பணியாது என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. எனவே அதைத் தடுக்கத்தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications