For Daily Alerts
Just In
சிறைக்குள் செல்போன், சிம் கடத்தல்-லாரி டிரைவர் கைது
திருச்சி: திருச்சி மத்திய சிறைக்குள் சிம் கார்டுகள், செல்போன், பேட்டரிகள் ஆகியவற்றை கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சிறை வளாகத்திற்குள் விழுந்த மரங்களை எடுத்துச் செல்வதற்காக நேற்று சிறைக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை விஜயராகவன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆனால் அவரது லாரியில் செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விஜயராகவனை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
Story first published: Thursday, February 21, 2008, 17:42 [IST]