தனியார் பஸ் மோதி தாசில்தார் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தனியார் பேருந்து மோதி தாசில்தார் பலியானார்.
பாளை செந்தில் நகரை சேர்ந்தவர் சாமி பிரசாத். கலெக்டர் அலுவலகத்தில் முத்திரை பிரிவு தாசில்தாராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு இவர் ஸ்கூட்டரில் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பிஷப் சர்ஜெண்ட் பள்ளி அருகே வந்தபோது பின்னால் அதி வேகமாக வந்த தனியார் டவுன் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமி பிரசாத் அதே இடத்தில இறந்தார்.
தனியார் டவுன் பஸ் விதிமீறல்களால் உயிர் பலி தொடர் கதையாக வருகிறது.












Click it and Unblock the Notifications