வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 1 கோடி
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை தலா ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்களின் திறமையை அதிகரிக்கவும், வேலையில் சிறப்பாக செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கவும் இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின்படி தமிழகம் மற்றும் கேரளாவுக்கு தலா ரூ. ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. கர்நாடகாவுக்கு ரூ. 84.39 லட்சமும், பஞ்சாபுக்கு ரூ. 65.61 லட்சமும், ஆந்திராவுக்கு ரூ. 50 லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் உள்ள மார்க்கெட்தேவைகளுக்கேற்ப சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்களைத் தயார் படுத்தவும், வேலைக்குப் போகப் போகும் நாட்டின் சட்ட, திட்டங்கள் குறித்து விளக்கவும், மொழியறிவுக்கான பயிற்சி, வேலை பார்க்கப் போகும் நாட்டின் கலாச்சாரம் ஆகியவை குறித்த பயிற்சியும் இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications