நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: ராமதாஸ்

சமீபத்தில் விஜய்காந்த் அளித்த பேட்டியில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் சாதி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம் என்றும் கூறியிந்தார்.
மேலும் ஊழல், சாதி, மதத்தை சார்ந்த கட்சிகளுடன் சேர மாட்டோம் என்றார்.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த செயற்குழுவில் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.
நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.
அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.
புதுச்சேரியில் நடைபெற்ற செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்க்கமான முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் இந்த முடிவுகளில் இருந்து விலகி செல்லமாட்டோம்.
இது ஒருபுறம் இருக்கையில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கட்சிகளை போன்றதல்ல பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழர்கள் அனைவராலும் அனைத்து தரப்பு மக்களாலும் ஆதரித்து அரவணைக்கப்படும் மாபெரும் அரசியல் இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து நிற்கிறது.
இந்த வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள், இக்கட்சியை சாதி கட்சி என்று முத்திரை குத்துவதற்கு இதுவரையில் படாதபாடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கின்றன என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications