யானைக்கு மதம் பிடித்தது
Subscribe to Oneindia Tamil
நெல்லை:கடையநல்லூரில் யானைக்கு மதம் பிடித்து நடுரோட்டில் திரிவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கடையநல்லூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான யானையை பொட்டல்புதூர் பள்ளிவாசலுக்கு திருவிழா காலங்களில் அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி திருவிழாவுக்காக யானையை அழைத்து சென்றனர்.
முதலியார் பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது யானைக்கு திடீரென மதம் பிடித்தது. யானை பாகன் உயிருக்கு அஞ்சாமல் யானையை கட்டுபடுத்தியும் அவரை தள்ளிவிட்டு திமிறி ரயில்வே கேட் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த பகுதியினுள் நுழைந்தது.
இதையடுத்து அப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அப் பகுதி மக்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மதம் பிடித்த யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications