ஸ்டிரைக்: 45 இந்தியர்களுக்குத் தண்டனை!
துபாய்: ஸ்டிரைக் என்ற பெயரில் வேலை பார்க்காமல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் நடந்து கொண்டதாக கூறி 45 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தங்களுக்கு அடிமாட்டு அளவுக்கு குறைந்த ஊதியம் தருவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு கோரியும் துபாயைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தம் செய்தனர். அந்த போராட்டத்தின்போது சில இடங்களில் தங்கியிருந்த முகாம்களில் தொழிலாளர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தவும் செய்தனர்.
இதையடுத்து 45 இந்தியத் தொழிலாளர்களை துபாய் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சட்டவிரோதமாக ஸ்டிரைக் நடத்தியது, வன்முறை செயல்களில் ஈடுபட்டது, சொத்துக்களை சேதப்படுத்தியது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தூண்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தவறான செயல் தடுப்புக்கான துபாய் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்ஸம் பக்கீர், 45 பேருக்கும் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தார். தண்டனைக் காலம் முடிந்ததும், 45 பேரும் நாடு கடத்தவும் அவர் உத்தரவிட்டார்.
தீர்ப்பு குறித்து ஜஸ்ஸம் பக்கீர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. இத்தகைய தீர்ப்பு இப்போதுதான் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக சட்டவிரோதமான செயல்களை நாட நினைக்கும் பிற தொழிலாளர்களுக்கு இது உறுதியான எச்சரிக்கையாக அமையும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications