லண்டன்: இந்திய கைதிக்கு பெருகும் ஆதரவு
லண்டன்: தற்காப்புக்காக தன்னைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி கொன்ற இந்தியருக்கு ஆதரவாக இங்கிலாந்தில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏராளமானோர் பத்திரிக்ைககள் மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் லாங்காஷயர் நகரில் உள்ள ஸ்கெல்மர்ஸ்டேல் என்ற இடத்தில், கடை வைத்திருப்பவர் டோனி சிங் (34). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது முகமூடி அணிந்த ஒரு நபர் டோனி சிங்கைத் தாக்கி அவரது கடையைக் கொள்ளையடிக்க முயன்றார்.
அவரைத் தடுத்த டோனி சிங்கை, அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கினார். இதையடுத்து தற்காப்புக்காக அந்தத் திருடன் வைத்திருந்த கத்தியைப் பறித்து அவரைக் குத்தினார். இதில் அந்த திருட்டு நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் டோனி சிங்கும் காயமடைந்தார். விரைந்து வந்த போலீஸார் டோனி சிங்கைக் கைது செய்தனர். விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் லியாம் கில்ரோ என்று தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் டோனி சிங் மீது எந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டைப் பதிவு செய்வது என்பது குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சிங்குக்கு ஆதரவாக இங்கிலாந்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
சிங் செய்தது கொலை அல்ல. தற்காப்புக்காகத்தான் அவர் திருடனைக் குத்திக் கொன்றார். இது மிகவும் துணிகரமான செயல். இதற்காக சிங்கைப் பாராட்ட வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது என்று பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாளிதழ்கள், இதழ்களுக்கு நூற்றுக்கணக்கானோர் இதுகுறித்து கடிதங்கள் எழுதி வருகின்றனர். அதில், டோனி சிங் ஒரு ஹீரோ. அவர் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு வீர விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும்.
உயிரிழந்த நபர் அப்பாவி அல்ல. பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர். அவர் இறந்ததில் தவறே இல்லை. அவருக்காக யாரும் அனுதாபப்பட மாட்டார்கள். எனவே இறந்து போன குற்றவாளிக்காக சிங்கைத் தண்டிப்பது நியாயமாகாது என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications