For Daily Alerts
Just In
யாழ்பாணத்தில் பயங்கர சண்டை- 50 பேர் பலி
கொழும்பு: யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடந்த கடும் சண்டையில் 46 விடுதலைப் புலிகளும், நான்கு ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நடந்த கடும் சண்டையில் 46 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவத் தரப்பில் நான்கு வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து இந்த மாவட்டங்களில் இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, February 27, 2008, 11:37 [IST]