For Daily Alerts
Just In
பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலி
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலியாயினர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
சூரத்-உதனா ரயில் நிலையங்களுக்கு இடையே இச் சம்பவம் நடந்தது.
ரயில்வே மேம்பாலத்தில் இவர்கள் நடந்து சென்றபோது ரயில் வந்துவிட்டது. இதையடுத்து ஒதுங்கக் கூட இடமில்லாமல் தவித்த இவர்கள் மீது ரயில் ஏறியது.
இதி்ல் 2 பெண்கள் உள்பட 16 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
Comments
Story first published: Thursday, February 28, 2008, 10:36 [IST]