For Daily Alerts
Just In
காரைக்கால் அருகே 21 இலங்கை மீனவர்கள் கைது
காரைக்கால்: காரைக்கால் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
காரைக்கால் அருகே 15 கடல் மைல்கள் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைவதை கடலோரக் காவல் படை கண்டறிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த கடலோரக் காவல் படையினர் அந்த படகை மடக்கியது. அதில் 21 பேர் இருந்தனர். தாங்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாமோ என்று கடலோரக் காவல் படையினர் சந்தேகப்படுகின்றனர். 21 பேரையும் சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.